விளையாட்டு

பிரதமர் மோடி உடன் ஐஸ்கிரீம் சாப்பிடப்போகும் பிவி சிந்து..!

Published

on

விரைவில் பிரதமர் மோடி உடன் பிவி சிந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மின்டன் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் பிவி சிந்து. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முன்னர் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுச் சென்றுள்ளார் சிந்து.

இதுகுறித்து பிவி சிந்துவின் தந்தை பிவி ரமணா கூறுகையில், “ஆகஸ்ட் 3-ம் தேதி சிந்து வருகிறார். நான் அவரைச் சந்திக்க டெல்லி செல்ல இருக்கிறேன். சொந்த நாட்டுக்காக இன்னும் எவ்வளவு பதக்கங்களைக் குவிக்க முடியுமோ அவ்வளவு வெல்வோம். பிரதமர் மோடி சிந்துவை மிகவும் ஊக்கம் ஊட்டுவார். டோக்கியோ சென்று வந்த பின்னர் சிந்து உடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதாகக் கூறி இருந்தார். இனி சிந்து பிரதமர் உடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version