இந்தியா
பழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயல வேண்டும்: மன்மோகன் சிங்
பழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயல வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில்,
“பொருளாதார நெருக்கடிகளை சீர்செய்ய நிபுணர்களின் கருத்தை கேட்டு மத்திய அரசு செயல்படுத்தவேண்டும்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 5% சரிந்து இருப்பது நீண்டகால நெருக்கடியை உணர்த்துகிறது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம்
அதிவேக வளர்ச்சி பெறக்கூடியதுதான்.
பிரதமர் மோடியின் செயலால்தான் எல்லா துறைகளிலும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியப்பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியிருப்பது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இந்தியா உள்ளது. எனவே பழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு முயல வேண்டும்” என்று மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.