சினிமா

தயாரிப்பாளர்களான ஹீரோக்களின் ஈகோ மோதலில் ரிலீசாகும் படங்கள் – ஜெயிக்கப்போவது யாரு?

Published

on

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் உள்ளார். ஆனால், அவர் சிலருக்கே சார்பாக நடப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தயாரிப்பாளர்களாக மாறிய ஹீரோக்களின் படங்கள் அடுத்த வாரம் போட்டா போட்டி போட்டு ரிலீஸ் ஆகவுள்ளன. இந்த ஈகோ ரேசில் வெல்லப் போவது யாரு? என்பதே தமிழ் சினிமாவின் கேள்வியாக உள்ளது.

தனுஷின் உண்டர்பார் தயாரிப்பில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 திரைப்படம், சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அவதாரமெடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள கனா திரைப்படம், படத் தயாரிப்பாளர்கள் சம்பளம் தராததால் தயாரிப்பாளராக மாறி விஷ்ணு விஷால் நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளன.

மேலும், ஜெயம் ரவியின் அடங்கமறு மற்றும் விஜய்சேதுபதியின் சீதக்காதி படங்களும் டிசம்பர் 21ம் தேதி ரிலீசாகின்றன.

இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற பில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

மேலும், பொங்கலுக்கு விஸ்வாசம், பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட மூன்று படங்களும் மோதவுள்ளன.

தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த இரு தினங்களில் தயாரிப்பாளர்கள் அவர்கள் இஷ்டம் போல படங்களை ரிலீஸ் செய்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version