செய்திகள்
ஜெயலலிதாவை அவமானப்படுத்தினார்களா? பிக்பாஸ் நிகழ்ச்சி மீது போலீசில் புகார்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இதை தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிலையில் இந்த போட்டியில், பங்கேற்பாளராக இருக்கும் ஐஸ்வர்யா தற்போது சர்வாதிகாரியாக இருக்கவேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் அவர் உண்மையாகவே சர்வாதிகாரி போல செயல்படுகிறார்.
இதனால் அவர் மக்கள் மத்தியில் அவப்பெயரையும் பெற்று உள்ளார். இந்தநிலையில் உள்ளே இருந்த இன்னொரு போட்டியாளர், ஐஸ்வர்யாவின் நடவடிக்கையை பார்த்துவிட்டு தமிழகத்தில் சர்வாதிகாரம் செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்று ஐஸ்வர்யாவிற்கு தெரியாது போல என்று கூறினார்.
தற்போது இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவமானப்படுத்துவது போல இருப்பதாக சென்னையை சேர்ந்த லூசியாள் ரமேஷ் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், கமலை கைது செய்ய வேண்டும் என்று அவர் புகார் அளித்துள்ளார்.