தமிழ்நாடு
ஜானகியை போல் கட்சியை சசிகலா விட்டுத்தர வேண்டும்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
‘ஜானகியை போல் சசிகலா நடந்து கொள்ள வேண்டும்’ என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைபாட்டால் இன்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைச் சந்திக்க இன்று காலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோர் ஒருவர் பின் ஒருவர் வந்தது பெரும் செய்தியானது.
அதன் பின்னர் சசிகலா வந்த காரில் அதிமுக கட்சிக் கொடி கட்டப்பட்டு இருந்தது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். ஜெயக்குமார் பேசுகையில், “மதுசூதனனை வந்து சந்தித்ததில் ஒரு பிரச்னையும் இல்லை. அது தவறு ஒன்றும் இல்லை.
ஆனால், காரில் அதிமுக கட்சிக் கொடியை எப்படிக் கட்டலாம்? அதிமுக கொடியுடன் சசிகலா வலம் வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜானகியைப் போல் கட்சியை சசிகலா விட்டுத்தர வேண்டும்” எனப் பேசியுள்ளார்.