இந்தியா
கொரோனா 3வது அலையையும் சந்திக்க தயாராக வேண்டும்: அறிவியல் ஆலோசகர் தகவல்
கொரோனா மூன்றாவது அலையையும் நாம் சந்திக்க தயாராக வேண்டும் என முதன்மை அறிவியல் ஆலோசகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய மனித அழிவை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தற்போது இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மூன்றாவது அலையையும் தவிர்க்க முடியாது என்றும் அதற்கு நாம் தயாராக வேண்டும் என்றும் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலைக்கே கோடிக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைந்தனர் என்பதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மூன்றாவது அலையையும் மனித இனம் சந்திக்க வேண்டுமென கூறியிருப்பது மனித இனத்திற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.