இந்தியா

கொரோனா கிடுகிடு: மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் லாக்டவுன்!

Published

on

இந்திய அளவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப் பரவல் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால் அம்மாநில அரசு சில நாட்களுக்கு முன்னர் அங்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தியது. தற்போது கர்நாடக மாநிலமும் பல்வேறு லாக்டவுன் கட்டுப்பாடுகளை அமல் செய்துள்ளது.

இதன்படி பள்ளிக்கு வந்து கொண்டிருந்த 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜிம், நீச்சல் குளங்கள் மூடப்படுகின்றன. ஆன்மிக வழிபாட்டுத் தலங்களில் எந்தவிதக் கூட்டமும் அனுமதிக்கப்படாது. போராட்டங்கள், பேரணிகளுக்கும் அனுமதி கிடையாது. திரையரங்குகளில், பார்களில், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ஏப்ரரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பின்னர் பல்வவேறு கட்டுப்பாடுகள் அமல் செய்யப்படலாம் எனத் தகவல்.

seithichurul

Trending

Exit mobile version