தமிழ்நாடு

கொடநாடு எஸ்டேட் கொலை.. ஆளுநரை நாளை சந்திக்கிறார் ஸ்டாலின்!

Published

on

சென்னை: கொடநாடு எஸ்டேட் கொலை தொடர்பாக நாளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து முறையிட போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்மக் கொலைகளின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த இரண்டு நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். இதுகுறித்து ஆவணப்படமும் அவர் வெளியிட்டார்.

இதில் மேத்யூஸ் சாமுவேல் தமிழக முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டி இருந்தார். தற்போது இந்த கொலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

ஸ்டாலின் தனது பேட்டியில், கொடநாடு விவகாரத்தை வெளியிட முடியாத அளவுக்கு தமிழக ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. கொடநாடு விவகாரத்தில் எந்த பதிலையும் தராத முதல்வர், வழக்கு மட்டுமே நடப்பதாக கூறுகிறார். ஒரு கொலைக்குற்றவாளி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டில்தான் என பத்திரிகையாளர் மேத்யூ கூறியுள்ளார்; இதைவிட அசிங்கம் தமிழகத்திற்கு எதுவும் இல்லை

seithichurul

Trending

Exit mobile version