கட்டுரைகள்

மூலிகை குடிநீர் -NATURAL RO

Published

on

                                              மூலிகை குடிநீர் -NATURAL RO

இன்றைய காலகட்டத்தில் சுத்தமான குடிநீர் என்பது அனைவர்க்கும் கிடைப்பதில்லை .அனைவராலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வாங்கி குடிக்க முடியாது.ஒரு 20 லிட்டர் குடிநீர் கேன் 30-40 ரூபாய்க்கு விற்பனையாகிறது . RO  குடிநீரிலும் எவ்வித சத்துக்களும் கிடையாது.சுத்திகரிப்பு என்ற பேரில் அனைத்து சத்துக்களையும் வெளியேற்றிவிடுகிறது .இதனால் எலும்புகளுக்குக் கிடைக்க வேண்டிய கால்சியம் சத்து கிடைக்காமல் பொய் விடுகிறது .

இதற்கு ஒரு தீர்வு  தான் இந்த குடிநீர் முடிச்சு .ஒரு சுத்தமான வெள்ளை பருத்தி துணியில் பின் வருகின்ற மூலிகைகளைக் கட்டி ஒரு குடிநீர் முடிச்சு தயார் செய்து கொள்ள வேண்டும்.இந்த முடிச்சை நாம் குடிக்கும் நீரில் ஒரு  4-5 மணி நேரம் போட்டு எடுத்து  விட்டால் நீர் சுத்திகரிக்கப் பட்ட நீர் போல் சுத்தமாகவும் சுவையாகவும்  இருக்கும் . ஒரு முடிச்சு 2 அல்லது 3 முறை பயன் படுத்தலாம்

குடிநீர் முடிச்சு செய்யத் தேவையான பொருட்கள் :

*ஒரு சிறிய வெள்ளை  பருத்தி துணி

*4 கரு மிளகு

*4 வெண் மிளகு

*ஒரு சிட்டிகை சீரகம்

*வெட்டிவேர் சிறிது

*நன்னாரி சிறிது

*தெற்றான்கொட்டை 1

இது அனைத்தும் நமக்கு  எளிதில் கிடைக்கக் கூடிய மூலிகைதான் .இதன் அருமை நமக்குத் தெரியாமல் பொய் விட்டது.வெட்டிவேர் இயற்கையிலேயே குளுமையானது .ரத்தத்தைச் சுத்திகரிக்க கூடியது.மிளகு,சீரகம் செரிமானத்துக்கு மிகவும் ஏற்றது .தெற்றான்கொட்டை ஒரு இயற்கை சுத்திகரிக்கபான் .

seithichurul

Trending

Exit mobile version