ஆன்மீகம்

‘எல்லாம் இனி நல்லதா நடக்கும்!’ – மகரம் ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்கள்!

Published

on

மகரம் ராசிக்காரர்கள் ஏழரை சனி துன்பத்தால் மனஅழுத்தம், தூக்கமின்மை, பணத்தட்டுப்பாடு, குடும்ப பிரச்னைகள் மற்றும் தொழிலில் வளர்ச்சி இல்லாத நிலைமைகளை சந்தித்திருப்பீர்கள். ஆனால், இனி சனி பெயர்ச்சி உங்களுக்கு புது சக்தியையும், சாதகமான பலன்களையும் கொண்டுவரப் போகிறது.

சனி பகவான் உங்கள் இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கேறுவதால், துன்பங்கள் குறைந்து, தன்னம்பிக்கை அதிகரிக்கும். சனி உபஜெய ஸ்தானத்தில் அமர்வதால் மகரம் ராசிக்காரர்களுக்கு எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக மாறும். இதனால் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும், தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி ஆகியவை தானாகவே கைகூடும்.

இனி நீங்கள் சோம்பல் நீங்கி, எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் இருந்த தடைகள் நீங்கும், வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும், மற்றும் கடனை அடைத்து, நிதி நிலையை மேம்படுத்துவீர்கள். இப்பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் நன்மை மற்றும் வளர்ச்சி தந்தளிக்கும்.

Poovizhi

Trending

Exit mobile version