தமிழ்நாடு

ஊழல் ஆண்டது போல நேர்மையும் ஆளும்: சகாயம் பன்ச்

Published

on

தமிழ்நாட்டை ஊழல் ஆண்டது போல நேர்மையும் ஆளும் என்று கூறியுள்ளார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். 

விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயமின் ‘அரசியல் பேரவை’ எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அனைத்துத் தொகுதிகளையும் இளைஞர்களை முன் வைத்துப் பிரச்சாரம் செய்து முடித்துள்ளார் சகாயம்.

இந்நிலையில் இந்த தேர்தலில், களத்தில் எப்படியான சூழல் இருக்கிறது என்பது குறித்து சகாயம், ‘தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும். நல்ல தலைமை ஆட்சி செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் நிச்சயம் நினைக்கிறார்கள். அந்த விழிப்புணர்வு அவர்கள் மத்தியில் வந்துவிட்டது. விரைவில் மக்கள் மத்தியிலும் அந்த விழிப்புணர்வு வரும். எம் நாட்டை ஊழல் ஆண்டது போல நேர்மையும் ஆளும்’ என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார். 

முன்னதாக சகாயம், ‘‘நேர்மையை முன் வைத்து தான் நாங்கள் களமாடுகிறோம். தமிழ்ச் சமூகத்தில் இந்த நேர்மை என்பது பல நூற்றாண்டுகளாக இழையோடுகிறது. ஏன், நம் சக காலத்திலேயே நேர்மைக்குப் பெயர் போன தலைவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள். அப்படிப்பட்ட நேர்மையான தலைவர்களை இளைஞர்கள் மத்தியில் உருவாக்கும் பணியைத் தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன். இது சுலபம் அல்ல. மிகவும் கடினமான காரியம் தான். ஆனால் சாத்தியமானதும் கூட’ என்று அரசியல் களம் காண்பது குறித்துப் பேசியிருந்தார். 

seithichurul

Trending

Exit mobile version