கிரிக்கெட்

இந்தியா- இலங்கை 2வது ஒரு நாள் போட்டி… இந்தியாவுக்கு 276 ரன்கள் இலக்கு!

Published

on

இலங்கை உடனான டி20 மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களில் மோதுவதற்காக இந்திய அணி இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இன்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் முடிவில் இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் அடுத்து பேட்டிங் செய்ய உள்ள இந்திய அணிக்கு 276 ரன்கள் இலக்காக உள்ளது.

மூன்று போட்டிகள் கொண்டு இந்த ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் பேட்ஸ்மேன்களான ப்ரித்வி ஷா, ஷிகர் தவான் மற்றும் இஷான் ஆகியோர் தற்போதைய சூழலில் அணிக்குப் பெரும் பலமாக உள்ளனர்.

இதன் மூலம் இரண்டாவது போட்டியையும் இந்தியக் கிரிக்கெட் அணி எளிதாக வென்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending

Exit mobile version