உலகம்

ஆஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்த புயல்… ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

Published

on

சக்தி வாய்ந்த புயல் ஒன்று ஆஸ்திரேலியாவைத் தாக்கியதில் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம், வீடுகள் என எந்தவொர் அடிப்படை வசதிகளும் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செரோஜா என்னும் புயல் ஆஸ்திரேலியாவை கடுமையாகத் தாக்கி உள்ளது. 170 கி.மீ வேகத்தில் இந்த செரோஜா புயல் ஆஸ்திரேலியாவைத் தாக்கியதில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. இந்த மழைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் இடிந்துள்ளன. குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலியா மிகக் கடுமையான சேதாரங்களைச் சந்தித்து உள்ளதாக ஆஸ்ஹிரேலியா பிரதமர் ஸ்கார் மோரிசன் அறிவித்துள்ளார்.

புயல் தாக்குதலுக்கான முக்கியக் காரணமாகவே காலநிலை மாற்றம் தான் என சுற்றுச்சூழலியளார்கள் தெரிவிக்கின்றனர். இன்று தான் புயலின் வேகமும் மழையின் தாக்கமும் சற்று தணிந்திருப்பதால் பாதுகாப்புப் படையினர் முழு வீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேதரங்களின் முழு நிலை இதுவரையில் தெரியாததால் மீட்புப் படையினர் துரிதப் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நூற்றாண்டில் காண முடியாத பயங்கரமான புயல் ஆக சரோஜா புயல் கருதப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் தொடர்ந்து இதுபோன வலிமையான புயல்களின் தாக்கம் இருக்கும் என்றும் சர்வதேச அளவில் சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version