தமிழ்நாடு
மலேசியாவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு சீமான் கோரிக்கை!
மலேசியாவில் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வரும் தமிழர்களை தமிழ்நாடு அரசு மீட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவில் பணிக்காகச் சென்ற பல தொழிலாளர்களும் தாயகம் திரும்ப முடியாது தவித்து வருகின்றனர். தமிழர்கள் பலர் நல்ல ஊதியத்துக்காக பல முகவர்களால் மலேசியா செல்லும் வாய்ப்பு பெற்று வேலைக்குச் செல்கின்றனர்.
அங்கிருக்கும் முதலாளிகள் அவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் காலகட்டத்தில் பலரும் வேலை இழந்து, ஊதியம் இன்றி, முதலாளிகளால் கடவுச்சீட்டு இல்லாமல் மலேசியாவிலேயே தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மலேசியா இந்தியத் தூதரகமும் தொழிலாளர்கள் தங்களது சொந்த செலவில் தான் இந்தியா திரும்ப வேண்டும் எனக் கூறி கைவிட்டுவிட்டது.
இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு தான் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மலேசியாவில் சிக்கித் தவித்து வரும் தொழிலாளர்களை தாயகம் திரும்ப வழி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாயகம் திரும்ப முடியாமல் மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டுக்கொண்டு வர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!https://t.co/oA1MUAmZJd@CMOTamilnadu @GingeeMasthan pic.twitter.com/J1bFETTAql
— சீமான் (@SeemanOfficial) August 6, 2021