வைரல் செய்திகள்

மயக்க மருந்து கொடுத்து சிங்கத்துடன் போட்டோ… புதுமணத் தம்பதியருக்கு எதிராகக் குவியும் கண்டனம்!

Published

on

பாகிஸ்தானில் திருமண புகைப்படத்துக்காக சிங்கக் குட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து பாகிஸ்தான் தம்பதியர் எடுத்த போட்டோ ஷூட்-க்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

பாகிஸ்தானில் லாகூர் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்தத் திருமணத்தில் மணமக்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள போட்டோ ஷூட்-க்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக புதுமணத் தம்பதியர் ஸ்டுடியோ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். புகைப்படத்துக்கு தேவையான ப்ராப்ஸ் ஆக சிங்கக் குட்டி ஒன்றை அழைத்து வந்துள்ளனர்.

மணமக்கள் அந்த சிங்கக் குட்டியை படுக்க வைத்து, உருட்டி விட்டு, கையில் தூக்கிக் கொஞ்சி விளையாடி உள்ளனர். இதற்கு ஏதுவாக அந்த சிங்கக் குட்டிக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர். மயக்க மருந்து செலுத்தப்பட்ட சிங்கக் குட்டியுடன் போட்டோ ஷூட் எடுத்ததற்காக பல விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மேலும், அந்த சிங்கக் குட்டியை இன்னமும் ஸ்டுடியோவிலேயே வைத்து உள்ளதால் சிங்கக் குட்டியை விடுவித்து காப்பாற்றக் கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version