இந்தியா

பாலியல் தொல்லை.. போலீஸ் ஸ்டேஷன் போகும் வழியில் தீ வைத்து கொளுத்தப்பட்ட பெண்

Published

on

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண், போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்லும் போது, தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகளும், பாலியல் துன்புறுத்தல்களும் இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில்தான் அங்கு பெண் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்டு இருக்கிறார்.

உத்தர பிரதேசத்தின் சீதாபூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பெண் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சீதாபூரை சேர்ந்த அந்த 28 வயது பெண், கடந்த வாரம் வெளியே செல்லும் போது ராமு மற்றும் ராஜேஷ் என்ற இரண்டு இளைஞர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இயற்கை உபாதையை கழிப்பதற்காக அவர் காட்டிற்கு செல்லும் போது இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

Trending

Exit mobile version