சினிமா

நடிகர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவது சரியா? விஜய்சேதுபதி கேள்வி!

Published

on

நடிகர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவதை ஏற்க முடியாது என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

ரஜினியின் பேட்ட படத்தில் ஜித்து எனும் வேடத்தில் நடித்துள்ள விஜய்சேதுபதியின் ஃபர்ஸ்ட்லுக் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

அது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு விஜய்சேதுபதி அளித்த பேட்டியில், பதிலளித்து வந்த விஜய்சேதுபதியிடம் அரசியல் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு விடையளித்த அவர், நடிகர்களை பார்த்து குளிர்வுட்டு போச்சான்னு அரசியல்வாதிகள் மிரட்டுவது, தணிக்கை செய்யப்பட்ட படத்தை மறு தணிக்கை செய்ய அடம் பிடிப்பது போன்ற விசயங்களை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் செய்வது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அரசியலுக்கு வருவீங்களா என்ற கேள்விக்கு, அதனை தற்போது அரசியலுக்கு வந்துள்ள நடிகர்களிடம் கேளுங்க என புன்னகையுடன் அம்பை திருப்பி விட்டுள்ளார் மக்கள் செல்வன்.

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version