தமிழ்நாடு

தொழில் அதிபரை மிரட்டி ₹5 லட்சம் பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றம்… 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…

Published

on

புதுச்சேரி திருமுடி சேதுராமன் நகர் ஆரோக்கிய அம்மாள் கார்டன் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மஞ்சுநாத்(63) தொழிலதிபர் இவருக்கும் லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். லதா ஸ்டீல் ஹவுஸ் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்திவரும் தட்டாஞ்சாவடி வீமன் நகரைச் சேர்ந்த ராஜேஸ்(எ) உதயகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் ராஜேஸ் தனது நண்பருடன் சேர்ந்து நேற்று முன்தினம் மஞ்சுநாத்தை முதலியார்பேட்டை ஜானசம்மந்தம் பகுதியில் ஒருவீட்டிற்கு வரவழைத்து மஞ்சுநாத்தை தாக்கி அவரது செல்போன், கைகடிகாரம், ஆ10 ஆயிரம் பணத்தை பறித்தனர். மேலும் அவரது வங்கி கணக்கிலிருந்து தங்களது 2 கணக்கிற்கு தலா 2.50 லட்சம் என 5 லட்சத்தை மஞ்சுநாத் செல்போன் மூலம் மாற்றினர். பின்னர் அவரை அடித்து விரட்டினர். இதையடுத்து அவர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வருகின்றனர்.

Trending

Exit mobile version