தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு…

Published

on

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24மணி நேரத்தை பொருத்தவரை வெப்பசலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் மற்றும் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 31°செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியிருக்கும்.

தென் தமிழகத்தில் கடல் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் அலைகளின் உயரம் 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை இருக்கும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று மாலை வரை நீடிக்கும்.

Trending

Exit mobile version