இந்தியா
தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம்!
கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்
அண்மையில் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுவார் என பேட்டி ஒன்றில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.
2014 ஆகஸ்ட் மாதம் முதல் தமிழக பாஜக தலைவராக உள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
எனவே யார் அடுத்த தமிழக பாஜக தலைவர் என்ற கேள்வியும் எலுந்துள்ளது.
மெலும், மகாராஷ்டிராவின் ஆளுநராக பகத் சிங் கோஷ்யரினும் கேரள ஆளுநராக ஆரிப் முகமது கானும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசம் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தானுக்கும் இமாச்சலுக்கு பண்டாரு தத்தாத்ரேயாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.