சினிமா செய்திகள்

டுவிட்டர் இல்லாவிட்டால் என்ன? எனக்கு எத்தனையோ வழி இருக்கு: கங்கனா ரனாவத்

Published

on

டுவிட்டரில் இல்லாவிட்டால் என்ன, எனக்கு எத்தனையோ வழி இருக்கின்றது என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

நடிகை கங்கனா ரனாவது சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்ததால் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் ஆக்சிஜன் குறித்து பொய்யான தகவல் தெரிவித்ததாகவும் இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து டுவிட்டர் நிர்வாகம் அவரது டுவிட்டர் கணக்கை சஸ்பெண்ட் செய்து அதிரடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனது டுவிட்டர் கணக்கை மீட்க கங்கனா ரனாவத் டீம் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில்தான் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது டுவிட்டர் என்பது ஒரு அமெரிக்க நிறுவனம் என்பதை நிரூபித்து விட்டது. பிறப்பால் வெள்ளையாக பிறந்தவர்கள், பழுப்பு நிறத்தில் பிறந்தவர்களை அடிமைப்படுத்த உரிமை உண்டு என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் என்ன நினைக்க வேண்டும், நாம் என்ன நினைக்க வேண்டும்? நாம் என்ன பேச வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்று அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். ட்விட்டர் இல்லாவிட்டால் என்ன? எனக்கு எத்தனையோ பிளாட்பாரம் இருக்கிறது, குறிப்பாக நான் செய்யும் தொழிலான நடிப்பு தொழிலிலேயே என்னுடைய கொள்கையை என்னால் கூறமுடியும் என்று கூறியுள்ளார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version