சினிமா செய்திகள்
’சூர்யா 41’ படப்பிடிப்பால் குமரி மக்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
சூர்யா நடித்துவரும் 41வது திரைப்படத்தை பாலா இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ’சூர்யா 41 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கிராமத்தில் படப்பிடிப்பிற்காக ஒரு சில வீடுகள் உண்மையாகவே கட்டப்பட்டு அந்த வீடுகளில் தான் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த வீடுகளை அந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கே இலவசமாக வழங்க சூர்யா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த கிராமத்தில் உள்ள வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரவும் சூர்யா உத்தரவாதம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
’சூர்யா 41 படத்தின் படப்பிடிப்பு காரணமாக அந்த பகுதியில் உள்ள வீடு இல்லாதவர்கள் வீடுகளை பெற உள்ளனர் என்பது அந்த பகுதி மக்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது.