தமிழ்நாடு

சசிகலாவுக்கு கோகுல இந்திரா புகழாரம்.. தினகரனின் ஆட்டம் ஆரம்பம்

Published

on

ஜெயலலிதாவுடன் தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா புகழாரம் சூட்டியுள்ளார்.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசகிலா இன்னும் சில தினங்களில் வெளியே வருகிறார். சசிகலாவின் வருகையும், டிடிவி தினகரனின் அடுத்தக்கட்ட தேர்தல் வியூகமும் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த முறை போல எம்எல்ஏ.,க்கள் யாரும் சசிகலாவின் பக்கம் சாய்ந்து விடாமல் இருக்க முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் முயற்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அதிமுக அமைச்சராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட கோகுல இந்திரா இன்று திமுகவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘சசிகலா ஒரு கட்சிக்கு தலைமை தாங்கியவர், அவர் எங்கே இருந்தாலும் போற்றப்படக்கூடியவர். ஜெயலலிதாவுடன் தவ வாழ்க்கை வாழ்ந்தவர். ஒரு பெண்ணாக இருந்து ஆளுமை செய்தவர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

கோகுல இந்திராவின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தினகரனின் வியூகம் கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.

Trending

Exit mobile version