தமிழ்நாடு
கோவையில் கொரோனா ?!!
![Coimbatore_Airport - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/03/Coimbatore_Airport.jpg)
கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாய்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 7 கடந்த மாதம் சென்னைக்குச் சுற்றுலா வந்தனர் .அவர்கள் சென்னையைச் சுற்றிப் பார்த்து விட்டு ஈரோடு வந்தனர் .
நேற்று அவர்கள் கோவையிலிருந்து தாய்லாந்து திரும்ப விமான நிலையம் வந்தனர்.விமான நிலைய அதிகாரிகள் அவர்களைச் சோதித்த பொது அவர்களில் ஒருவருக்கு அதிகப்படியான காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது .உடனே அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு இரத்த மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதால் காலில் புண் ஏற்பட்டுள்ளது .அதற்கான சிகிச்சையும் வழங்கப்படுகிறது. சோதனை முடிவு வந்த பிறகு தான் அவருக்குப் பாதிப்பு உள்ளதா? என்று தெரிய வரும் .
7 நபர்களில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி உள்ளது,மற்றவர்களுக்கு இல்லை .அதே போல் கத்தார் நாட்டிலிருந்து இந்தியா வந்த 26 வயது பெண் ஒருவரும் கொரோனா அறிகுறிகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.