இந்தியா

கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பலி Terrible fire at Corona Hospital in Mumbai, 10 killed

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 10 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதும் குறிப்பாக மும்பையில் மட்டும் தினசரி சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உள்ள மும்பை மேற்கு எல்பிஎஸ் மார்க் என்ற பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் என்று எட்டியுள்ள நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளின் கூட்டம் அதிகமாகி உள்ள நிலையில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியானது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version