செய்திகள்
எழுந்து உட்கார்ந்த கருணாநிதி.. இன்னும் 2 நாட்களில் வீட்டிற்கு திரும்புகிறார்?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் சீராக இருக்கிறது, அவர் நேற்று எழுந்து உட்கார்ந்ததாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கிறார். கடந்த ஒருவாரமாக அவருக்கு உடலில் இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்த அவர் தீவிர சிகிச்சைக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார். லண்டன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அவர் நேற்று எழுந்து அமர்ந்து உள்ளார். மருத்துவர்களின் உதவியுடன் அவர் எழுந்து அமர்ந்து இருக்கிறார். அவரது சிறுநீரக நோய் தொற்று பெரிய அளவில் குணமடைந்து உள்ளது.
இதே நிலை நீடித்தால் நாளை முழு குணமடைவார் என்று கூறப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் அவர் சனிக்கிழமை இரவு வீட்டுற்கு அழைத்து செல்லப்பட வாய்ப்புள்ளது.